• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உண்டியல் சேமிப்பை கொரோனா தொற்றுத்தடுப்பு நிதியாக அளித்த மழலைகள்!

March 30, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கொரோனா நிதியாக, தாங்கள் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 7060 ரூபாயினை மழலையர்கள் இருவர் வழங்கி சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது.கொரோனா தொற்றுத்தடுப்பு நிதியை பொது மக்கள் வழங்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அந்த வகையில் கோவை ஆவாராம்பாளையம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது 5 வயது மகன் ரேனோ ஜோஸ்வா (lkg) மற்றும் 4 மகள் ஷெர்லி (prekg) இருவரும் உண்டியலில் பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக உறவினர்கள் கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து இருந்தனர்.

இந்நிலையில், அந்த சேமிப்பு 7060 ரூபாய் பணத்தை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து கொரோனா தொற்று தடுப்பு நிதியாக வழங்கினர். தொலைக்காட்சியில் மக்கள் சாப்பாடு , தண்ணீர் இல்லாமல் நடந்து செல்வதை பார்த்து நாமும் அவர்களுக்கு உதவ வேண்டும் என குழந்தைகள் சொன்னதால் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து நிதியை ஆட்சியரிடம் கொடுத்து இருப்பதாக குழந்தைகளின் தந்தை சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் படிக்க