March 24, 2020
தண்டோரா குழு
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள்
,கடைகள்,வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள்,மூடப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.கடைகளுக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்று கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.