• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை

March 24, 2020 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கையாக சிறையில் கூட்டத்தை குறைக்கும் வகையில் கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைகண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க