• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

March 23, 2020 தண்டோரா குழு

லண்டன் நாட்டில் இருந்து வந்த திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

48 வயதான திருப்பூர் தொழில் அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது.சமீபத்தில் அவர் லண்டன் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.மருத்துவ சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது. தற்போது அவர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கபட்டு உள்ளார்.

மேலும் அவரது மனைவி மற்றும் அவருடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைபடுத்தபட்டு கண்காணிப்பில் உள்ளனர். சுகாதார துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.மேலும் கோவை ஸ்பெயினில் இருந்து வந்த மாணவியும் மற்றும் லண்டனிலிருந்து திரும்பிய திருப்பூரை சேர்ந்த 48 வயது நபர் ஆகிய இருவருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்த நிலையில் கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க