• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது

March 18, 2020 தண்டோரா குழு

கேரளாவிலிருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பெற்றுவந்து கோவையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிங்காநல்லூர் அருகே உள்ள காமாட்சிபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருநதனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததன் காரணமாக அந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர்.அதில் இருசக்கர வாகனத்தில் இருக்கைக்கு அடியில் 25 ஆயிரம் மதிப்பிலான 2900 லாட்டரி சீட்டுகள் மறைத்து கடத்தி வரபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை சிங்கநல்லூர் காவல் நிலையம் அழைத்துச் சென்பழறு விசாரணை நடத்தினர்.

அதில் பிடிப்பட்ட நபர் திருச்செந்தூரைச் சேர்ந்த பிரபு என்பது கோவையில் தங்கியிருக்கும் பிரபு கேரளாவிலிருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து பிரபுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க