• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரை தாக்கிய வழக்கில் ஒருவர் உபா சட்டத்தின் கீழ் கைது

March 18, 2020 தண்டோரா குழு

கோவையில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த6-ம் தேதி சுந்தராபுரம் பகுதியைச் சேரந்த ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் சூர்யபிரகாஷ் என்பவரது கம்பெனிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் தாக்கியதில் சூர்ய பிரகாஷ் படுகாயமடைந்தார்.இந்த சம்பவம் தொடர்பான கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா என்பவரை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நூர்முகமது வீட்டில் கோவை மாநகர போலீசார் சோதனைமேற்கொண்டனர்.அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் முகமது ஹனீபா பொது அமைதிக்கு ஊறு ஏற்படுத்த சதிதிட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து முகமது ஹனீபா மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க