• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்வே பயணிகளுக்கு முக கவசம் வழங்க வேண்டும் – எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா

March 17, 2020 தண்டோரா குழு

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க ரயில்வே பயணிகளுக்கு முக கவசம் வழங்க வேண்டும் என எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா வலியுறுத்தியுள்ளார்.

கோவை வின்சென்ட் சாலையில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

மத்திய அரசு இலாபத்தில் இயங்கும் பல்வேறு துறைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார். இலாபத்தில் உள்ள எல்ஐசியை தனியாருக்கு விற்பனை செய்வது நியாயம் அல்ல எனவும், தனியாரிடம் வழங்கப்பட்ட ரயில்களில் மக்களுக்கு பெரியளவில் வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

ரயில்வே தனியார் மயம் ஆவதால், இனி இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைப்பது அரிதாகும் எனவும், ரயில் வண்டிகளை விமானம் போல பார்க்க வேண்டிய நிலை வரும் எனவும் அவர் தெரிவித்தார். தனியார் ரயில்களில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது எனவும், ரயில்வே தனியார் மயத்தை எதிர்த்து தேவைப்பட்டால் மத்திய அரசிற்கு அழுத்தம் தரும் போராட்டங்களை நடத்துவோம் எனவும் அவர் கூறினார். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும், ரயில்வே பயணிகளுக்கு முக கவசம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க