• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாஸ்க் அணிந்து கட்டுமானப்பணி கே.சி.பி நிறுவனம் அசத்தல்

March 15, 2020 தண்டோரா குழு

கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள்,பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு நடத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து வேலை செய்ய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 1000 மாஸ்க் வாங்கி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. கட்டுமான பணி செய்யும் தொழிலாளர்கள் அலுவலக ஊழியர்கள் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். கைரேகை பதிவு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கே.சி.பி இன்ஜினியர் ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் கூறுகையில்,

” தொழிலாளர்கள் பாதுகாப்பு மிக அவசியம். ஒரே இடத்தில் அதிக தொழிலாளர்கள் வேலை செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். இருமல் தும்மல் போன்ற வற்றால் நோய்க் கிருமி பரவாமல் தடுக்க இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம். தினமும் 10 முதல் 15 முறை கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்களைப் போல மேலும் பல கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு மாஸ்க் வாங்கி கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய முன்வர வேண்டும்.” என்றார்.

மேலும் படிக்க