• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்ப சண்டையில் பெண் முகத்தில் ஆசிட் வீச்சு – கோவையில் மூதாட்டி கைது

March 14, 2020

கோவையில் குடும்ப சண்டை காரணமாக பெண் ஒருவர் மீது மூதாட்டி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள் (80). பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் பணி செய்து வருகிறார். இவரது உறவினர் சகுந்தலா (55). இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் இருவரும் வீதியில் கோதாவில் இறங்கியுள்ளனர்.இந்த சண்டை காரணமாக கொதித்துப்போன மூதாட்டி ராமாத்தாள், பாத்திரங்களுக்கு ஈயம் பூச பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து சகுந்தலாவின் முகத்தில் ஊற்றினார்.

ஆசிட் பட்டு அலறித்துடித்த சகுந்தலாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமாத்தாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க