• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆணைகட்டியில் பெண் மாவோயிஸ்ட் கைது

March 11, 2020

கேரள வனப்பகுதியில் மாவோஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு நிலையில் இன்று ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கேரளா வன பகுதியான ஆனைகட்டி, பில்லுர்டேம் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.இதையடுத்து மாவோஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவோஸ்ட் சிறப்பு தடுப்பு பிரிவு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 5 குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக எல்லை பகுதிக்குள் மாவோயிஸ்ட் கும்பல் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதையடுத்து கேரளா எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் போலீஸ் கண்கானிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சூர் அருகே நெடுகல்கம்பை ஆதிவாசிகள் கிராமத்திற்கு சென்ற மாவோயிஸ்டுகள் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிகாலை
கோவை ஆனைகட்டி பகுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க