• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேராளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக கேரள எல்லை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள்

March 9, 2020

கேராளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியை தொடர்ந்து கோவையில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் தமிழகத்தில பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் கால்நடை நோய்தடுப்பு மற்றும் சுகாதார துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைகளாக உள்ள 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 5 இடங்களிலும், பொள்ளாச்சியில் 7 இடங்களிலும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்து அடிக்கப்படு வருகிறது. 12 இடங்களிலும் 24 மணி நேரம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோழி, முட்டை, தீவனம், கோழிக்கழிவுகள் கொண்டுவருவது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க