March 6, 2020
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கேட்வே 20 எனும் பெயரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக் கிடையான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 40க்கு மேற்பட்ட கல்லூரியிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 50,000 வரையிலான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. டெக்டப்மாஸ், பேப்பர் பிரசெண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளில் அறிவித்திற ன்களை எடுத்துரைக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. விழாவில் ஹரிஹரன் வரவேற்புரை வழங்கினார். பி. எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.சி சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஜயேந்திரன் ஜெயசீலன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.