• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

February 28, 2020

டெல்லி கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்து, கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டங்களின் போது, கலவரம் வெடித்தது. இதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அக்கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கண்டித்து, கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டும் பாஜக தலைவர்கள் மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க