• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டில் கள்ளநோட்டுகள் அடித்த மூவர் கைது

February 23, 2020 தண்டோரா குழு

கோவையில் வீட்டில் கலர் பிரிண்டர் வைத்து கள்ளநோட்டுகள் அடித்த மூன்று பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3.64 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சரவணம்பட்டி போலீசார் நேற்று இரவு மணியக்காரன் பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மணியகாரம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை சோதனையிட்டபோது 200 ரூபாய் நோட்டு கட்டுகள் மூன்று கொண்ட 60 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்தனர். அந்த பணத்தை போலீசார்வாங்கி பார்த்தபோது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவர்களிடம் விசாரித்த பொழுது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் . விசாரணையில் பிடிபட்ட நபர்கள் வட பள்ளியைச் சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் கிதர் முஹம்மது (66) மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் மகேந்திரன் (39) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடாகம் ரோடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (30) என்பவர் இந்த நோட்டுகளை தயாரித்து தந்ததாக கூறினர். தொடர்ந்து திருவள்ளுவர் நகரில் உள்ள சூரியகுமாரின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் பிரிண்டர் மெஷின் மற்றும் லேமினேஷன் கருவிகளையும் தயாரித்து வைத்திருந்த இரண்டு லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர் .

மேலும் படிக்க