• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிப் 14ஆம் தேதி மனித உயிரை காக்கும் மருத்துவமனையின் வெள்ளி விழாவில் மருத்துவர்கள் கொண்டாட்டம்

February 10, 2020

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி வெள்ளிக்கிழமை மருத்துவமனை கலையரங்கத்தில் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் “புவனேஸ்வரன்”, நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை பேராசிரியர் “ராஜ்குமார்” ஆகியோர் கூறுகையில்,

வெள்ளி விழாவில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாகவும், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, இந்த ஒரு வருடம் முழுவதும் சிறப்பு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும், 8000 மூளை அறுவை சிகிச்சையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகை கட்டணத்திலும், அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமும் மருத்துவ சேவைகளை பி.எஸ்.ஜி மருத்துவமனை அளித்து வருவதாகவும். வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பி.எஸ்.ஜி செயலியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.மேலும் விபத்தின் போது தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் அவசர உதவி சிகிச்சைக்கு 7449 I08 108 எண்ணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றனர். பேட்டியின்போது டாக்டர் ராஜேந்திரன், பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க