• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி புரிந்த தாய்லாந்து மன்னர் மரணம்

October 13, 2016 தண்டோரா குழு

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88) இன்று மரணமடைந்தார்.

தாய்லாந்து நாட்டின் மன்னரான பூமிபால் உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற சிறப்போடு காலமானார்.அவரது சகோதரர் ஆனந்த மகிதோல் மறைவுக்குப் பின்னர் கடந்த 1946ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னராகப் பொறுப்பேற்றார். சுமார் 70 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டின் மன்னராக இருந்துள்ளார் பூமிபால். அவர் அந்நாட்டு மக்களால் கடவுளாக போற்றப்பட்டார்.

தாய்லாந்து மன்னருக்கு சட்டரீதியாக அதிகாரம் இல்லாமல் இருந்தாலும், அமெரிக்காவில் பிறந்த பூமிபால் மக்களின் ஆதரவால் கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்ததார். இவரது மறைவிற்கு பின் தாய்லாந்து மன்னராக அவரது மகன் மகா வஜ்ஜிரலாங்கோன் பதவியேற்பார் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும், பூமிபால் மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற தன்மை நிலவும் தாய்லாந்தின் ஆட்சியைக் கைப்பற்ற கடந்த 1932ஆம் ஆண்டு முதல் 19 முறை ராணுவப் புரட்சி நடைபெற்றுள்ளது. இதில், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முயற்சி உள்பட 12 முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவத்துள்ளார்

மேலும் படிக்க