February 8, 2020
கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச் காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46) இவர் காமராஜ புரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து
வருகிறார். அதே குடோனில் 5 வயது சிறுமியின் பெற்றோர் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் குழந்தையை அங்கு விளையாட விட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆனந்த் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
அந்த நேரத்தில் சிறுமி அழும் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது ஆனந்தின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு அவர்கள் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி ஆனந்தை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.