• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவை தெற்கு மாவட்ட 82வது வட்ட கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

February 7, 2020

குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட 82வது வட்ட கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப் பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் சார்பில் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட
82வது வட்ட கழகத்தின் சார்பில் கோவை மாநகர மாவட்ட இளைஞரிணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், மற்றும் 82வது வட்ட கழகத்தின் பொறுப்பாளர் பதுருதீன் தலைமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஜமாஅத்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.இதில்,தொழில் நுட்பஅணி் ஒருங்கிணைப்பாளர் முஹ‌ம்ம‌து சன்பர், ஏஎஸ்எப் அப்பாஸ், இலியாஸ், ஏகே.ராஜா, தெளபிக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க