January 25, 2020
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் துறை, கோவை மாவட்ட ஊர்க்காவல் படை, போக்குவரத்து துறையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியில் துடியலூர் காவல் நிலைய அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
பேரணி துடியலூர் ரவுண்டானா முதல் வெள்ளக்கிணர் பிரிவு வரை நடைபெற்றது.