• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணம்

January 24, 2020

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணமாக கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழக சுற்றுலா துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் சுற்றுலா பயண திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக இன்று காலை 8 மணியளவில் , பள்ளி மாணவ மாணவிகள் 150 பேரை மூன்று பேருந்தில் ஈஷா யோகா மையம் , பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வேளாண் பல்கலைக்கழகம் மியூசியம் மற்றும் வ. உ .சி பூங்கா , அரசு அருங்காட்சியகம் ஆகிய 5 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தப் பயணத்தை கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரி அய்யண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் படிக்க