• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி தெரியாமல் பேசுகிறார் உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார் – உதயநிதி ஸ்டாலின்

January 21, 2020

ரஜினி தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் தான் நடத்திய ஊர்வலத்தில்ராமன் சீதை சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று செருப்பால் அடித்ததாக துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்தது. ஆனால் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இக்கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “ஏற்கெனவே காவிரி விவாகரம் தொடர்பாக பேசிவிட்டு, பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார். அதேபோல் பெரியார் குறித்து பேசியதற்காகவும் உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்பார். ரஜினிகாந்த் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை” என்றார்.

மேலும் படிக்க