• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியார் கல்லுரி பெண்கள் விடுதியில் நுழைந்த 7அடி நீளமான நாகப்பாம்பு

January 18, 2020

கோவை பாரதியார் கல்லுரி பெண்கள் விடுதியில் 7அடி நீளமான நாகப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்லுரியில் பயிலும் பல்வேறு மாவட்டத்தினை சார்ந்த மாணவிகள் பாரதியார் கல்லுரியின் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். பொங்கல் பன்டிகையை முன்னிட்டு கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளில் 90% பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் அதிகமாக மாணவிகள் இல்லாமல் ஒரு சில மாணவிகளே தங்கி உள்ளனர்.

இந்தநிலையில் விடுதிக்குள் சுமார் 7அடி நீளமான நாகப்பாம்பு நுழைந்தது. இதனை கண்ட மாணவிகள் பயமடைந்து கூச்சலிட்டனர். இவர்களின் கூச்சல் சபதம் கேட்டு அங்கு விறைந்த விடுதி காப்பாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்க்கு விறைத்து வந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து, அதை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். கல்லூரி பெண்கள் விடுதியில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க