• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாரதியார் கல்லுரி பெண்கள் விடுதியில் நுழைந்த 7அடி நீளமான நாகப்பாம்பு

January 18, 2020

கோவை பாரதியார் கல்லுரி பெண்கள் விடுதியில் 7அடி நீளமான நாகப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்லுரியில் பயிலும் பல்வேறு மாவட்டத்தினை சார்ந்த மாணவிகள் பாரதியார் கல்லுரியின் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். பொங்கல் பன்டிகையை முன்னிட்டு கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளில் 90% பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் அதிகமாக மாணவிகள் இல்லாமல் ஒரு சில மாணவிகளே தங்கி உள்ளனர்.

இந்தநிலையில் விடுதிக்குள் சுமார் 7அடி நீளமான நாகப்பாம்பு நுழைந்தது. இதனை கண்ட மாணவிகள் பயமடைந்து கூச்சலிட்டனர். இவர்களின் கூச்சல் சபதம் கேட்டு அங்கு விறைந்த விடுதி காப்பாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்க்கு விறைத்து வந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து, அதை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். கல்லூரி பெண்கள் விடுதியில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க