• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

January 12, 2020 தண்டோரா குழு

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தேசிய கொடிகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க