January 12, 2020
தண்டோரா குழு
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தேசிய கொடிகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.