• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆப்வியூஎக்ஸ் ( AppViewX ) நிறுவனம் கோவை , சென்னை மற்றும் பெங்களுரு நகரங்களில் விரிவாக்க திட்டம்

January 7, 2020 தண்டோரா குழு

சர்வதேச அளவில் லோ கோட் நெட்ஒர்க் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஆப்வியூஎக்ஸ் ( AppViewX ) , கோவை , சென்னை மற்றும் பெங்களுரு நகரங்களில் விரிவாக்க திட்டமிட்டுள்ளது .

இந்திய தொழில்நுட்ப முனைவோரான ஆனந்த புருசோத்தமன் , கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்வியூ எக்ஸ் எனும் ஐடி ஆட்டோமேஷன் நிறுவனத்தை துவக்கினார். வேகமாக வளர்ச்சி பெற்ற இந்நிறுவனத்திற்கு பிரைட்டன் பார்க் கேட்டல் 30 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்தது. நிதி நிறுவனங்கள், சில்லறை விற்பனையகங்கள் , மருத்துவம் , சுகாதாரம் , எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் என பெயர் பெற்று , தலைசிறந்த நிறுவனங்களாக திகழும் பல நிறுவனங்களுக்கு சேவையாற்றி வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் புருஷோத்தமன் கோவையில்
செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இந்தியாவில் விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான விநியோகம் இவற்றை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் முழுமையான தகவல் தொழில்நுட்ப தானியங்கி தளத்தை புதுமையான முறையில் வழங்க உள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,ஆண்டுக்கு ஆண்டு நூறு சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு உள்ளதாகவும் அதன் பொருட்டு முக்கிய நகரங்களான சென்னை,பெங்களூரு, கோவையில் ஆப்வியூஎக்ஸ் விரிவாக்கத்தை விரைவில் துவக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க