• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு பேருந்துக்களை இயக்காமால் போராட்டம்

October 11, 2016 தண்டோரா குழு

கோவை சுங்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அரசு பேருந்துக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவர் நேற்று(10-10-16) அன்று மாலை சேரன்மாநகர் பகுதியில் இருந்து காந்திபுரம் வரை செல்லக்கூடிய அரசு பேருந்தை ஒட்டி வந்தார்.

சேரன்மாநகர் பகுதியில் வளைவு ஒன்றில் முன்னாடி சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது லேசாக பேருந்து ஓரசியது. இதனால் கோபம் அடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த திருமலைநம்பி என்பவருக்கும் பேருந்து ஓட்டுனர் செல்வகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் தாக்கி கொண்டனர் என காவல்துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

இதில் காயம் அடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் சக ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு தெரியவரவே அவர்கள் இன்று அதிகாலை பேருந்துகளை இயக்காமல் சுங்கம் பணிமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் ஓட்டுனரை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பணிமனை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சமாதானம் செய்து ஓட்டுனரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது, பேருந்துகள் இயக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க