• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன் – விஜய் சேதுபதி

August 23, 2019 தண்டோரா குழு

இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க வுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்த விஜய் சேதுபதி,

“நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனிடமே இதை நேரில் சொன்னேன். இந்த படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கும். என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சியும் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்.” இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க