• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி

October 5, 2016 தண்டோரா குழு

கோவையில் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே சிங்காநல்லூர் பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, அதை அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு தூரோகம் செய்வதாக குற்றம்சாட்டினர். பின்னர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் காவல் துறையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர். ஆர்பாட்டத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர் அதில் 2 பேர் பெண்கள் ஆகும்.

இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழக ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் கூறுகையில் மத்திய அரசு காவிரி வாரியத்தை உடனடியாக அமைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாய இயக்கங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க