• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துவங்கியது அருண் விஜயின் மாஃபியா படப்பிடிப்பு !

July 6, 2019 தண்டோரா குழு

துருவங்கள் 16′ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.

இதனையடுத்து அரவிந்தசாமி நடித்த ‘நரகாசுரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்படிப்பு நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.இதையடுத்து, , கார்த்திக் நரேன் அடுத்ததாக அருண் நடிக்கும் மாஃபியா படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. அருண் விஜய் கார்த்திக் நரேனுடன் செல்பி எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க