• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராம்குமார் தந்தை மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

September 29, 2016 தண்டோரா குழு

சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்ட ராம்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது, அதற்கு பதிலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை நியமித்து உத்தரவிட்டது.

மேலும் ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தங்களது தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவரது தந்தை பரமசிவம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததார். இன்று பரமசிவத்தின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க