• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீதுகாவல்துறை எச்சரிக்கை கடும் நடவடிக்கை – காவல்துறை

September 26, 2016 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து, அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இதையெடுத்து, மருத்துவமனை நிர்வாகம் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் தான் உள்ளார் என்றும் வழக்கம்போல் உணவு எடுத்துக் கொண்டார் என்றும் அறிக்கை வெளியிட்டது.
இருப்பினும், தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து இன்று பிற்பகல் முதல் பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகின்றது.

முதல்வர் பூரண உடல்நலத்துடன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்றும்,எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும், வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க