• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீதுகாவல்துறை எச்சரிக்கை கடும் நடவடிக்கை – காவல்துறை

September 26, 2016 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து, அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இதையெடுத்து, மருத்துவமனை நிர்வாகம் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் தான் உள்ளார் என்றும் வழக்கம்போல் உணவு எடுத்துக் கொண்டார் என்றும் அறிக்கை வெளியிட்டது.
இருப்பினும், தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து இன்று பிற்பகல் முதல் பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகின்றது.

முதல்வர் பூரண உடல்நலத்துடன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்றும்,எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும், வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க