• Download mobile app
21 Jun 2025, SaturdayEdition - 3419
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்கர் விருதுக்கு சென்றது விசாரணை திரைப்படம்

September 22, 2016 தண்டோரா குழு

தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் அயல் நாட்டு பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சினிமா உலகின் சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கபட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு விசாரணை, சாய்ரத், உட்தாபஞ்சாப் உட்பட 29 படங்கள் தேர்வு செய்யபட்டு அதில் விசாரணை படம் சிறந்தாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் அயல்நாட்டு பிரிவுக்கு , இந்தியா சார்பாக அனுப்பப்பட இருக்கிறது.

தனுஷின் வண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம், கோவையை சேர்ந்த ஆட்டோ சந்திரன் எழுதிய லாக் அப் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். விசாரணைக் கைதிகளுக்கு ஏற்படும் நிகழ்வுகளை மிகவும் கச்சிதமாக வெற்றிமாறன், அந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பார்.

இப்படத்தில் சமுத்திரகனி அட்டகதி தினேஷ், ஆனந்தி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் 72-வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்டு விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க