கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யமுடிவு செய்யபட்டு இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கினார். சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிப்பில் வர்மா என்ற தலைப்பில் இப்படம் உருவாகி வந்தது. அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.
படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால், இந்தப்படம் கைவிடப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து அனைவருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுமட்டுமின்றி, வேறொரு புதிய இயக்குனரை வைத்து படத்தை மீண்டும் எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தினை அடுத்து இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தின் அசோசியேட் இயக்குனர் கிரிசய்யா இப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்தூ இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி நடிகை பிரியா ஆனந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதைபோல், ஆத்தியா வர்மா படக்குழுவுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இணையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் சிட்டிசன், ஆயுத எழுத்து, 7ம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் சூர்யாவின் 7ம் அறிவு படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவில் பிஸியாக இருந்த நிலையில் 7 ஆண்டிற்கு பிறகு விக்ரம் மகன் துருவ் நடிக்கும் தமிழ் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது