• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் சின்னமலை-விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

September 21, 2016 தண்டோரா குழு

சென்னை சின்னமலை-விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, 2வது வழித்தடத்தில் சின்னமலை – விமான நிலையம் இடையே மேம்பாலப் பணிகளும், முதல் வழித்தடத்தில் ஷெனாய் நகர் – கோயம்பேடு இடையே சுரங்கப் பாதை பணிகளும் விரைவுபடுத்தப்பட்டன. இதில், சின்னமலை – விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது.கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து சின்னமலை – மீனம்பாக்கம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. மேலும் சின்னமலை மற்றும் விமானநிலையம் இடையிலான 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில், நங்கநல்லூர் சாலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை சுரங்க ரயில் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க