• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

February 14, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கட்டாயம் குறிப்பாக பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜிக்கு எதிரான பெண் எஸ்.பியின் பாலியல் புகார் குறித்த வழக்கில் அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீது பெண் எஸ்.பி புகார் அளித்தன் பேரில், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி. முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி கமிட்டி விசாரணையை தொடரலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறினார்.

மேலும், “தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்” என்று தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது அறையிலும் இரு வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க