• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பட்டத்தரசியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

February 13, 2019 தண்டோரா குழு

கோவையில் பட்டத்தரசியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையை திருடியுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் பந்தயசாலை காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர். திருடப்பட்ட சிலையின் மதிப்பு பல இலட்ச ரூபாய் இருக்குமென கூறப்படுகிறது.

மேலும் படிக்க