• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

February 11, 2019 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்தாக ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கான தேர்வு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை உறுதிபடுத்தும் விதமாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைவதில் பெருமகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் சிவன் ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸுடன் துப்பாகி, ஸ்பைடர் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க