• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்!

September 20, 2016 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டித்து நாளை கர்நாடகா மாநிலத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

காவிரி விவகாரம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், நான்கு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேலும் நாளை முதல் வரும் 27ம் தேதி வரை தமிழகத்திற்கு 6000 கன அடி நீர் காவிரியிலிருந்து வழங்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

இதையெடுத்து, உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை கண்டித்து கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்ள் அறிவித்துள்ளது.

காவிரியிலிருந்து 15000 கன அடி நீர் திறந்து விடக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் கடந்த வாரம் கர்நாடக முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.மேலும் தமிழ வாகனங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தியும், தமிழர்களும் தாக்கபட்டனர்.

இந்நிலையில் நாளை மீண்டும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருப்பதால் கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. தற்போது ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றும் வருகிறது.

மேலும் படிக்க