• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் மீண்டும் தடை

September 20, 2016 தண்டோரா குழு

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யபட்ட வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யபட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில்,கடந்த ஞாயிறன்று அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையெடுத்து, ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும் அவரது பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் இரு நீதிபதிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதால் 3வது நீதிபதியின் கருத்தை கேட்க வேண்டியுள்ளது.எனவே, 3வது நீதிபதியின் கருத்தை கேட்கும் வரை ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு மீண்டும் தடை விதித்தது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க