• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் மீண்டும் தடை

September 20, 2016 தண்டோரா குழு

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யபட்ட வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யபட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில்,கடந்த ஞாயிறன்று அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதையெடுத்து, ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும் அவரது பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் இரு நீதிபதிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதால் 3வது நீதிபதியின் கருத்தை கேட்க வேண்டியுள்ளது.எனவே, 3வது நீதிபதியின் கருத்தை கேட்கும் வரை ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு மீண்டும் தடை விதித்தது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க