சென்னையில் நடந்து வரும் நடிகர் விஜயின் படப்பிடிப்பை காண வரும் ரசிகர்களால் படக்குழுவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெறி, மெர்சல் உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. இந்நிலையில், இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பை காண படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகே தினமும் கூடுவதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் வேறு வழியின்றி சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு மாற்றலாமா என படக்குழு யோசித்து வருவதாக சமீபத்தில் தகவல் பரவியது.
ஆனால் படக்குழு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரசிகர்கள் வருவதால் ஷூட்டிங் நடத்த சிரமம் இருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை என கூறியுள்ளனர். படப்பிடிப்பு தொடங்கிய தினத்தில் இருந்து நாள்தோறும் ரசிகர்களின் வரவு அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது என்றாலும் நடிகர் விஜய் ரசிகர்களை தவிர்த்துவிட்டு செல்லவில்லை ரசிகர்களை பார்த்து கை அசத்து விட்டு தான் படப்பிடிப்பு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்துறைக்கான ஆட்டோமேஷன்தொழில்நுட்ப நவீனமயமாக்கலுக்கு புதிய ஸ்மார்ட் தீர்வுகள்: லாரிட்ஸ் நுட்சன் எலக்ட்ரிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் அறிமுகம்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி