• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் 4 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை – இருவர் கைது

February 1, 2019 தண்டோரா குழு

கோவையில் 4 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை காரமடையில் உள்ள தனியார் பள்ளியின் 3ம் எண் கொண்ட வாகனத்தின் ஓட்டுனர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துனர் மாரிமுத்து. இருவரும் கடந்த செவ்வாய்கிழமை பள்ளி வாகனத்தில் வந்த அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி வாகனத்திலேயே பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து துடியலூர் அனைத்து
மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பள்ளி வாகன ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் கிளீநர் மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க