• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை மாநகராட்சி பள்ளியில் முதல் முறையாக ரோபோ ஆய்வகம் திறப்பு !

January 30, 2019 தண்டோரா குழு

மதுரை மாநகராட்சி பள்ளியில் முதல் முறையாக ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. மதுரை தத்தனேரியில் உள்ள திரு.வி.க. பள்ளியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் எனப்படும் ஸ்டெம் கல்வி முறையின் கீழ் இந்த ஆய்வகமானது 13லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் விழாவில் பங்கேற்று ஆய்வகத்தைத் திறந்து வைத்தார். எந்திர மனிதன் எடுத்துக் கொடுத்த கத்திரிக்கோலை வைத்து அவர் ரிப்பனை வெட்டினார்.

இந்த ரோபோ அறிவியல் கல்வி பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற அறிவியல் ஆசிரியர்களும் ரோபோ அறிவியலில் வல்லுநர்களும் இந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு அடுத்த ஓராண்டில் ரோபோ தொழில்நுட்பம் பற்றி கற்பிக்க உள்ளனர். இதில் எந்திர மனிதர்களை வடிவமைத்தல், இயங்க வைத்தல், கட்டளைகளை கேட்டு நடக்கச் செய்தல் போன்றவற்றை செய்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ரோபோ ஆய்வகத்தை பயன்படுத்துவது பற்றி சொல்லிக்கொடுக்க அமெரிக்க இந்திய கூட்டமைப்பைச் சேர்ந்த ரோபோ தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்வந்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இந்த அரசுப் பள்ளியில் ரோபோ ஆய்வகம் அமைவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க