• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேன்சரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவையில் பள்ளி மாணவர்கள் நிதி திரட்டி வாங்கிய இலவச சேவைக்கான வாகனம்

January 30, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவர்களால் திரட்டிய நிதியை கொண்டு கேன்சரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சேவைக்கான வாகனம் வாங்கப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று 31வது ஆண்டு விழாவையொட்டி கண்ணைகவரும் விதமாக நடனங்களும்,விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது .இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளியில் கிராமத்தில் கொண்டாடுவது போல் நம்ம கிராமம் என்ற திருவிழாவானது நடைபெற்ற நிலையில் இதில் மாணவர்களால் திரட்டிய நிதியினை கொண்டு கேன்சரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சேவைகளை செய்யும் வகையில் கேன்சர் பவுன்டேஷனுக்கு நன் கொடையாக வாகனம் வழங்கபட்டது.

இதை தொடர்ந்து கேன்சர் பவுண்டேசனின் நிறுவன அறங்காவலர் டாக்டர் பாலாஜி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். இந்நிகச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க