• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வண்டியை முந்த முயன்ற நபரைத் தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் மகன்

September 19, 2016 தண்டோரா குழு

பீகார் மாநிலத்திலுள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில்,சட்டமன்ற உறுப்பினரான பிரேந்திரா சின்ஹாவின் மகனான குனல்ப்ரதாப் என்பவர் 26 வயதான பின்டு குமாரைத் தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.

பிரேந்திரா சின்ஹா,லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தல் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்.இவரது மகன் குனல்ப்ரதாப்.வெள்ளிக் கிழமையன்று ஒப்ரா பகுதியில் இவரது கார் சென்று கொண்டிருக்கும் போது பின்டு குமார் என்பவர் குனல்பிரதாப்ன் காரை முந்திச் சென்றுள்ளார்.

அதை பொறுத்துக் கொள்ள முடியாத குனல்பிரதாப் தனது வண்டியை நிறுத்தி முதலில் தள்ளிவிட்டதாகவும்,பின்பு குத்தியதாகவும் பின்டு கூறியுள்ளார்.குனல் தன்னிடம் அவரது கட்டளைக்கு அடிபணியும் படி கூறியதைத் தான் மறுத்ததால் தன்னைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் குனலின் தந்தை இந்த குற்றச் சாட்டை மறுத்துள்ளார்.பிண்டு குமார் குற்றப்பின்னணி உடையவர் என்றும் ,தனது மகனின் காரை முந்தியதற்கு அவரைக் கொல்லும் நோக்கமும் இருக்கலாம் என்றும்,சண்டை நடந்திருக்கலாம்,ஆனால் கத்தியால் குத்துவது சாத்தியமில்லை,ஏனெனில் பல ஊழியர்கள் அவ்விடத்தில் சாட்சிகளாக இருந்துள்ளனர் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதே போல் போன மாதம் சட்டிஸ்காரில் ஒரு அரசியில் வாதியின் மகன் இரண்டு வண்டியோட்டிகளை அடித்தது குறிப்பிடத்தக்கது.தாங்கள் வீதியில் செல்லும் போது எந்த வண்டியும் தங்களை முந்தவும் கூடாது,வண்டிகள் அனைத்தும் தங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்ற மனப்பான்மை அரசியல் வாதிகளுக்கு மட்டுமின்றி அவர்களது வாரிசுகளுக்கும் அமைந்திருப்பது துரதிருஷ்டமே.

மேலும் படிக்க