கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் திருநகர் குடியிருப்போர் நல சங்கம். இந்த சங்கத்தின் சார்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நான்கு தொழிலார்களை அழைத்துள்ளனர். அங்கு வந்த தொழிலாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது முருகன் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது சகோதரார் பாண்டித்துரை முயன்ற போது அவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியில் இருந்து அவர்களது உடலைகளை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்