• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் விதைப் பந்துகள் தயாரிப்புப் பயிலரங்கம்

January 22, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த காரமடையில் உள்ள , டாக்டர் ஆர் . வி . கலை அறிவியல் கல்லூரியில் விதைப்பந்து தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.

கோவையை அடுத்த காரமடையில் உள்ள , டாக்டர் ஆர் . வி . கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இன்று விதைப்பந்து தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிலரங்கம் இன்று நடைபெற்றது. இப்பயிலரங்கத்தை கல்லூரியின் செயலர் சுந்தர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வே.சுகுணா முன்னிலை வகித்தார். மேலும், அவினாசி , ரீஜன் கிரீன் நிறுவனர் ப.ராமசாமி மற்றும் ரா.பத்மபிரியா ராமசாமி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மரங்களின் முக்கியத்துவத்தையும், இயற்கை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் விதைப்பந்தின் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இப்பயிலரங்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெற்று சுமார் 1300 விதைப்பந்துகளை தயார் செய்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . நட்புச்சூழல் மன்றத்தின் பொறுப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கி.சின்னராஜ்,அ.செந்தில்குமார் ஆகியோர் இப்பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் படிக்க