• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுங்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

January 22, 2019 தண்டோரா குழு

இந்து முன்னனி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் இறுதி ஊர்வலத்தில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உரிய இழப்பீட்டை அக்கட்சியின் தலைவரிடமிருந்து பெற்றுத்தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக மனு அளித்தனர்.

கடந்த 22.09.2016 அன்று கோயமுத்தூர் துடியலூரில் இந்து முன்னணி இயக்க செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது இறுதி ஊர்வலம் காடேஸ்வர சுப்பிரமணியம், தசரதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் , அரசு பேருந்துகள், காவல் துறை வாகனங்கள், தனியார் கடைகள், என ஐந்து கோடி சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இது சம்பந்தமாக மாநகரம் மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் சுமார் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்து முன்னனியைச்சார்ந்த 642 நபர்கள் கைது செய்யப்ட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சொத்து அழிப்பிற்கு காரணமான கட்சி, அதன் தலைமை மற்றும் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியவர்கள் மீது பொறுப்பு சுமத்தி, அவர்களிடமிருந்து சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் பணத்தை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் படிக்க