• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செப்.16ல் தமிழகத்தில் பால் பெட்ரோல் கிடைக்காது !

September 14, 2016 தண்டோரா குழு

செப்16ம் தேதி நடக்கும் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றதின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகவில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், கர்நாடகவில் வாழும் தமிழர்களை தாக்கியதுடன் அவர்களது கடைகள், வாகனங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை கண்டித்து தமிழகத்தில் செப்16ம் தேதி பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள், அமைப்புகள், வணிகர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் செப் 16ம் தேதி தமிழகத்தில் உள்ள பங்குகள் இயங்காது என தமழ்நாடு பெட்ரோல் விநியோகிஸ்தர்கள் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார். அதன்படி செப் 16ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 4600 பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.

அதேபோல், செப்.16ம் தேதி கடையடைப்பு போராட்டத்திற்கு பால் விநியோகஸ்தர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்று தமிழகத்தில் பால் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க