தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான டோரா,அறம்,கோலமாவு கோகிலா,இமைக்கா நொடிகள் போன்ற கதாநாயகியை மைய்யமாக கொண்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாரா தற்போது ஐரா,விஸ்வாசம்,சயீரா நரசிம்ம ரெட்டி,கொலையுதிர் காலம்,எஸ்.கே.12 என பிசியாக நடித்து வருகிறார்.இதில் கொலையுதிர் காலம் படத்தை அஜித்தின் பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார்.நீண்ட நாட்களாக உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறியுள்ள படக்குழு,படம் 2019-ம் ஆண்டு ஜனவரி26 ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
பூஜா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ‘ஹஷ்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு