• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் முன்னாள் தூத்துக்குடி திமுக எம்.பி. பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தம்

November 19, 2018 தண்டோரா குழு

சென்னை செல்வதற்காக நேற்று நள்ளிரவு கோவை விமான நிலையம் வந்த முன்னாள் தூத்துக்குடி திமுக எம்.பி ஜெயதுரை சூட்கேசில் 5 தோட்டாக்களுடன்,பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் திமுக எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரையை வழக்கமாக அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அவர் கொண்டு வந்த சூட்கேசில் 5 தோட்டாக்களுடன்,பிஸ்டல் கொண்டு வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து விமான விதிப்படி இவற்றை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர்.மேலும் ஆயுதம் கொண்டு வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறி அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயதுரை,அவர்களுடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டார்.தான் உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்துள்ளதாக கூறிய அவர் தன்னுடன் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கூறினார்.ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக முடியாது என்று கூறி விட்டனர்

இதையடுத்து அந்தத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தனது உறவினர் ஒருவரிடம் வாங்கி ஒப்படைத்தார் ஜெயதுரை.இதையடுத்து அதிகாரிகள் அவரை மதுரைக்குக் கிளம்ப அனுமதித்தனர்.இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க