• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டி வந்த போலி சி.பி.ஐ அதிகாரி கைது

September 8, 2016 தண்டோரா குழு

சென்னையில் பெண்கள் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டி வந்த போலி சி.பி.ஐ அதிகாரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் அடுத்த பெசண்ட் நகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியின் மேல் வீட்டில் தங்கியிருப்பவர் தாமோதரன் (27).

இவர் சமீப காலமாகத் தனது வீட்டின் கீழே நடைபெற்று வந்த பெண்கள் விடுதியில் உள்ள குளியலறையில் கைப்பேசியை வைத்து பெண்கள் குளிப்பதை ஆபாசமாகப் படமெடுத்துள்ளார்.

பின்னர் சம்பந்தப்பட்ட பெண்களிடையே அதைக் காட்டி அதிக பணம் பெற்றதுடன், தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இந்தத் தகவல் விடுதி நிர்வாகிக்குத் தெரிய வரவே, நிர்வாகி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாமோதரனைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.அப்போது தான் ஒரு சி,பி.ஐ.அதிகாரி எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவன் மீது சந்தேகம் வரவே, அவனைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் அவன் நாமக்கல்லைச் சேர்ந்தவன் எனவும், பல மாதங்களாக இது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அவனிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட, சி.பி.ஐ அதிகாரி, வழக்கறிஞர், உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இது போன்ற செயலில் இவன் மட்டும் தான் ஈடுபட்டானா அல்லது பலர் உள்ளனரா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவன் பயன்படுத்தி வந்த சைரன் வைத்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க