• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டி வந்த போலி சி.பி.ஐ அதிகாரி கைது

September 8, 2016 தண்டோரா குழு

சென்னையில் பெண்கள் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டி வந்த போலி சி.பி.ஐ அதிகாரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் அடுத்த பெசண்ட் நகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியின் மேல் வீட்டில் தங்கியிருப்பவர் தாமோதரன் (27).

இவர் சமீப காலமாகத் தனது வீட்டின் கீழே நடைபெற்று வந்த பெண்கள் விடுதியில் உள்ள குளியலறையில் கைப்பேசியை வைத்து பெண்கள் குளிப்பதை ஆபாசமாகப் படமெடுத்துள்ளார்.

பின்னர் சம்பந்தப்பட்ட பெண்களிடையே அதைக் காட்டி அதிக பணம் பெற்றதுடன், தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இந்தத் தகவல் விடுதி நிர்வாகிக்குத் தெரிய வரவே, நிர்வாகி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாமோதரனைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.அப்போது தான் ஒரு சி,பி.ஐ.அதிகாரி எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவன் மீது சந்தேகம் வரவே, அவனைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் அவன் நாமக்கல்லைச் சேர்ந்தவன் எனவும், பல மாதங்களாக இது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அவனிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட, சி.பி.ஐ அதிகாரி, வழக்கறிஞர், உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இது போன்ற செயலில் இவன் மட்டும் தான் ஈடுபட்டானா அல்லது பலர் உள்ளனரா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவன் பயன்படுத்தி வந்த சைரன் வைத்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க